
எல்லோரும் உன்னைப்போல் 
இருக்கவேண்டும் என நீ நினைத்தால் 
உன் அறிவுதான் இந்த 
உலகத்தின் அறிவாக இருக்கும்..
உன்னை கடந்துவிட்ட துன்பங்களுக்கும் 
உன்னால் நடந்துவிட்ட துன்பங்களுக்கும் 
இடையே உள்ள வேறுபாட்டில்தான்
உன் வாழ்வின் இன்பக் கணக்கு எழுதப்படுகிறது..
சப்தங்களை நிறுத்தாதவரை 
உன்னால் அமைதியை உணரமுடியாது,
எண்ணங்களை நிறுத்தாதவரை 
உன்னால் தெளிவாக சிந்திக்கமுடியாது..
அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல் 
இருக்கும்போது நீ மனசு சொல்வதை 
மட்டும் கேள்! அறிவை கேட்காதே!
அறிவுக்கு அனைத்தையும் தெரியும் 
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.
நீ புரிந்துகொண்ட விசயங்களை 
தெரிந்து கொள்ள நினைக்காதே!
நீ தெரிந்து கொண்ட விசயங்களை 
புரிந்து கொள்ளாமல் இருக்காதே!
நல்லதை அறிந்துகொள்!
தீயதை தெரிந்துகொள்! 
 
 
