சனி, 5 பிப்ரவரி, 2011

உலகத்தில் நீ

இன்னமும் எண்ணமுடியாத  நட்சத்திரங்களின் முன் 
எண்ண முடியும் 
எண்ணமற்ற மனிதர்களாய் நாம்..


மனம் கொல்லும் மனிதன்தான் 
மனிதர்களை கொல்ல முடியும். 


தினம் படைத்த பூமியும் 
கணம் மாறவில்லை,


மனம் கிடைத்த மனிதனே!
கணமெல்லாம் ரணம் செய்து 
யுகம் வளர்த்திடும் உன் 
முகமும் அகமும் மறையும்.....
நிழல் இரவு, பகல் உறவு 
எனும் உலக சுற்றில்....