இன்னமும் கரைந்து கொண்டிருக்கின்றேன் கணங்களைப்போல், கடமையின் கால் விலங்கு அறுந்து நடை பழகும் குழந்தையாய் நான். வருடங்கள் மட்டும் இலையுதிர் காலமென என் இளமை உதிர்த்து செல்கிறது. துணை தேட விழைந்த பயணம் தூசி தட்டி திறக்கும் ஜாதக பக்கங்கள். பன்னிரு கட்டங்களில் மட்டுமே பயணிக்கும் மண வாழ்க்கை. பிறந்த கணங்களிலேயே அன்பை உணர்ந்தும் பகிர கிடைக்காத நிலை. அவளால் மட்டுமே உணரக்கூடிய அன்பு அச்சு பதிக்கும் காகிதங்களின் கைகளில்... . . .