வெள்ளி, 16 அக்டோபர், 2009

கனவு(கள்)


விளக்கொளியும் பிறையென
சிறுத்த இரவு..

சிணுங்கி சிணுங்கி
மறுதலித்தாள்,
மருதவிப்போடு..

குளிரின் படிமம்
தளிரில் படிந்திடாது
விரட்டிய வேட்கையின்
வெம்மமூச்சு..

நினைந்து நினைந்து
இணைந்த கணங்களில்
கலைந்து வெடித்த
கனவு(கள்)...

2 கருத்துகள்:

விஜய் சொன்னது…

நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா சங்கர். (புரியாத கவிதைகளை )

வாழ்த்துக்கள்.

விஜய்

ஹேமா சொன்னது…

சங்கர்,இனிய தீபஒளி வாழ்த்துக்கள்.

கவிதை கனவுக்குழந்தை.