அகரத்தை
ஆதியில்
இணைத்து
ஈன்றது
உந்தன்
ஊடகம்,
எங்களின்
ஏற்றமாய்..
ஐந்தினையும்
ஒன்றுபட்டு
ஓங்கிடும்
ஔவியம் கொள்ளாத
அஃகம் நீயல்லவா..
எங்கள் தமிழே...
அனைவருக்கும்
என் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
புதன், 14 ஏப்ரல், 2010
திங்கள், 8 மார்ச், 2010
பெண்கள் தினம்.
இறப்பெனும் நிலை சென்று
பிறப்பினை கொடுக்கும்
பெண்மையே!
உன் நினைவுகள் என்றும்
இறப்பதில்லை இவ்வுலகினில்...
வலை உலக சகோதரிகளுக்கும்
தோழிகளுக்கும் என் இனிய பெண்கள் தின
வாழ்த்துக்கள்..
பிறப்பினை கொடுக்கும்
பெண்மையே!
உன் நினைவுகள் என்றும்
இறப்பதில்லை இவ்வுலகினில்...
வலை உலக சகோதரிகளுக்கும்
தோழிகளுக்கும் என் இனிய பெண்கள் தின
வாழ்த்துக்கள்..
லேபிள்கள்:
பெண்மை


சனி, 6 பிப்ரவரி, 2010
காகிதங்களின் கைகளில்...
இன்னமும் கரைந்து கொண்டிருக்கின்றேன்
கணங்களைப்போல்,
கடமையின் கால் விலங்கு அறுந்து
நடை பழகும் குழந்தையாய் நான்.
வருடங்கள் மட்டும் இலையுதிர் காலமென
என் இளமை உதிர்த்து செல்கிறது.
துணை தேட விழைந்த பயணம்
தூசி தட்டி திறக்கும் ஜாதக பக்கங்கள்.
பன்னிரு கட்டங்களில் மட்டுமே
பயணிக்கும் மண வாழ்க்கை.
பிறந்த கணங்களிலேயே அன்பை உணர்ந்தும்
பகிர கிடைக்காத நிலை.
அவளால் மட்டுமே உணரக்கூடிய அன்பு
அச்சு பதிக்கும் காகிதங்களின் கைகளில்...
.
.
.
புதன், 20 ஜனவரி, 2010
மருத்துவன்
இப்படியும் அப்படியும்
ஆட்டுவிக்கிறான்
எப்படிப்பட்ட மனிதர்களையும்,
கத்திமுன் பணியவைக்கிறான்
புத்திகொண்ட புருஷர்களையும்.
எப்பவாது காயப்படுத்தியும்
விடுகிறான்.
இத்தனையும் செய்துவிட்டு
ரசம் சூழ்ந்த கண்ணாடி முன்
நம்மை ஒப்பனை கவிதையும்
ஆக்கிவிடுகிறான் அரையடி
கத்திகொண்டு..
(நன்றி பா.ரா )
ஆட்டுவிக்கிறான்
எப்படிப்பட்ட மனிதர்களையும்,
கத்திமுன் பணியவைக்கிறான்
புத்திகொண்ட புருஷர்களையும்.
எப்பவாது காயப்படுத்தியும்
விடுகிறான்.
இத்தனையும் செய்துவிட்டு
ரசம் சூழ்ந்த கண்ணாடி முன்
நம்மை ஒப்பனை கவிதையும்
ஆக்கிவிடுகிறான் அரையடி
கத்திகொண்டு..
(நன்றி பா.ரா )
லேபிள்கள்:
நகல்


புதன், 13 ஜனவரி, 2010
தைத்திருநாள்
போகி
செந்தூரமிட்டது அந்தி வானம்,
தாவாரம் தொட்டது ஆவாரப்பூக்கள்.
தேவாரம் பாடியது மங்கள இசை
ஆராவாரமிட்ட சிறு பெண்டிர்,
ரீங்காரமிட்டது மாலை வண்டுகள்.
மூவடிகம்பினில் தீமூட்டி சுவைத்த
முக்கண் சூரண தேங்காய்,
பழையன பற்றி எரிந்தது போகியில்
புதிய ஜோதியாய்..
'தை'த்திருநாள்
வானத் தை வளைக்கும் வானவில்
நாணத் தை விளைக்கும் பூவைகள்
கானத் தை இசைத்திடும் பாடல்கள்
புருவத் தை உயர்த்திடும் வீர விளையாட்டுக்கள்
பருவத் தை அடைந்திடும் விடலைப் பெண்கள்
கோலத் தை ஏற்றிடும் புதிய வாசல்
காலத் தை வென்றிடும்
இத் தை திருநாள்..
மாட்டுப்பொங்கல்
"சேற்றிலே" உன் கால் வைக்கும் முன்
தன் கால் வைத்து உழைத்த காளைக்கும்
"வீட்டிலே" தாய்ப்பால் சுரக்கும் முன்
தன் பால் தந்து காத்திடும் பசுவிற்கும்
நன்றிகள் ஆயிரம் சொல்வோம்
மாட்டுப் பொங்கல் திருநாளிலே..
காணும்பொங்கல்
உழவுக்கு வந்தனமிட்டோம்
உறவுக்கு சந்தனமிட்டோம்
பசுவுக்கு படையலிட்டோம்
பாசத்தின் உணர்விலிட்டோம்.
ஊரெல்லாம் பொங்கலிட்டது
உணர்வெல்லாம் பொங்கிவிட்டது
உழைத்திட்ட உள்ளங்களே!
களைத்திட்ட சோர்வுநீங்க
ஊரெல்லாம் கூடிடுவோம்
உளமார பாடிடுவோம்
இக்'காணும்' பொங்கலிலே...
அனைவருக்கும் இனிய 'தை' திருநாள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..
செந்தூரமிட்டது அந்தி வானம்,
தாவாரம் தொட்டது ஆவாரப்பூக்கள்.
தேவாரம் பாடியது மங்கள இசை
ஆராவாரமிட்ட சிறு பெண்டிர்,
ரீங்காரமிட்டது மாலை வண்டுகள்.
மூவடிகம்பினில் தீமூட்டி சுவைத்த
முக்கண் சூரண தேங்காய்,
பழையன பற்றி எரிந்தது போகியில்
புதிய ஜோதியாய்..
'தை'த்திருநாள்
வானத் தை வளைக்கும் வானவில்
நாணத் தை விளைக்கும் பூவைகள்
கானத் தை இசைத்திடும் பாடல்கள்
புருவத் தை உயர்த்திடும் வீர விளையாட்டுக்கள்
பருவத் தை அடைந்திடும் விடலைப் பெண்கள்
கோலத் தை ஏற்றிடும் புதிய வாசல்
காலத் தை வென்றிடும்
இத் தை திருநாள்..
மாட்டுப்பொங்கல்
"சேற்றிலே" உன் கால் வைக்கும் முன்
தன் கால் வைத்து உழைத்த காளைக்கும்
"வீட்டிலே" தாய்ப்பால் சுரக்கும் முன்
தன் பால் தந்து காத்திடும் பசுவிற்கும்
நன்றிகள் ஆயிரம் சொல்வோம்
மாட்டுப் பொங்கல் திருநாளிலே..
காணும்பொங்கல்
உழவுக்கு வந்தனமிட்டோம்
உறவுக்கு சந்தனமிட்டோம்
பசுவுக்கு படையலிட்டோம்
பாசத்தின் உணர்விலிட்டோம்.
ஊரெல்லாம் பொங்கலிட்டது
உணர்வெல்லாம் பொங்கிவிட்டது
உழைத்திட்ட உள்ளங்களே!
களைத்திட்ட சோர்வுநீங்க
ஊரெல்லாம் கூடிடுவோம்
உளமார பாடிடுவோம்
இக்'காணும்' பொங்கலிலே...
அனைவருக்கும் இனிய 'தை' திருநாள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..
புதன், 6 ஜனவரி, 2010
ஒரு பிடி காற்றுக் கோளம்
ஆரோகணமும் அவரோகணமும்
புணர்ந்துகொண்டிருந்தது,
ஆழியொத்த தாழி ஒன்றில்,
கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப
சபிக்கப்பட்டிருந்தது..
அரவமொத்த பாத தீண்டல்கள்
சாகா வரம்பெற்று உருண்டுகொண்டிருந்தது
பூகோள பந்தொன்று..
ஆயிரம் சூரிய பார்வை ஒற்றை வட்டத்திற்குள்
எட்டுத்திக்கும் நிழல் விம்மம்..
பச்சை பாய் கிடத்தி காலனிட்ட
உந்துதலில் ஓலமிட்டும் மரிக்கக் கடவாத
ஒரு பிடி காற்றுக் கோளம்...
(நன்றி நேசமித்திரன்)
லேபிள்கள்:
நகல்


வெள்ளி, 1 ஜனவரி, 2010
நகல்
ஒரு போக்குவரத்து சாலை நிறுத்தத்தில்
நம் வலையுலக ஜாம்பவான்களின் வரிகள்
எப்படி இருக்குமென்று ஒரு சிறு கற்பனை..
நேசமித்திரன்
மேகம் புணர்ந்த துளிகளில் அழுக்ககற்றி குளித்தது
சேன்றோவின் வைபர் கைகள்,
மரித்துக்கொண்டிருந்த சிகப்பு வினாடிகளில்
கசிந்துகொண்டிருந்தது சைலன்சர் சுருட்டு.
மெர்சிடிசின் யன்னலில் நிழல் முகம்
ஒப்பனை செய்துகொண்டிருந்தது
சாலை கடந்த கிளையொன்று.
தரை புணர்ந்த தடம் விட்டுசென்றது
தண்ணீர் வாகனம் பச்சை ஒளி கடந்து...
பா.ரா
நின்ற வாகனத்தில் விழித்தெழுந்தான் பிஞ்சுக்கரம் பட்டு,
கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி,
மாமாவ புடிச்சுக்கோ என்றாள் மூன்று வயது மகனிடம்,
பலூனுக்கு விழைந்து அழுதவனை அதட்டினாள்
உங்கப்பன் சரியா இருந்தா நமேக்கேன்டா
இந்த நிலைமையென்று குரல் தழுத்தாள்..
எங்கோ தப்புணர்ந்தவன் வேகமாய் இறங்கி
வாங்கி வந்தான் கைநிறைய பலூன்களுடன்
அழுத குழந்தையின் கைகளில் ஒன்றை திணித்து..
சிறு சிறு ஊதல்களில் பெரிதாகும் பலூனைப்போல்
சிறு சிறு ஊடல்களில் பெரிதாகும் பந்தம்
உணர்ந்தவனாய் விட்டுவந்த மனைவியையும்
குழந்தைகளையும் எண்ணி பேருந்து நிற்கும்முன்
இறங்கிகொண்டிருந்தது அவன்மனம்
அடுத்த நிறுத்தத்தில்....
(நேசமித்ரா, பா.ரா பிழையிருந்தால் மன்னியுங்கள்
உங்கள் நிழலாய் நானும் வரைந்து
வடித்து பார்க்கின்றேன் அவ்வளவே)
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நம் வலையுலக ஜாம்பவான்களின் வரிகள்
எப்படி இருக்குமென்று ஒரு சிறு கற்பனை..
நேசமித்திரன்
மேகம் புணர்ந்த துளிகளில் அழுக்ககற்றி குளித்தது
சேன்றோவின் வைபர் கைகள்,
மரித்துக்கொண்டிருந்த சிகப்பு வினாடிகளில்
கசிந்துகொண்டிருந்தது சைலன்சர் சுருட்டு.
மெர்சிடிசின் யன்னலில் நிழல் முகம்
ஒப்பனை செய்துகொண்டிருந்தது
சாலை கடந்த கிளையொன்று.
தரை புணர்ந்த தடம் விட்டுசென்றது
தண்ணீர் வாகனம் பச்சை ஒளி கடந்து...
பா.ரா
நின்ற வாகனத்தில் விழித்தெழுந்தான் பிஞ்சுக்கரம் பட்டு,
கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி,
மாமாவ புடிச்சுக்கோ என்றாள் மூன்று வயது மகனிடம்,
பலூனுக்கு விழைந்து அழுதவனை அதட்டினாள்
உங்கப்பன் சரியா இருந்தா நமேக்கேன்டா
இந்த நிலைமையென்று குரல் தழுத்தாள்..
எங்கோ தப்புணர்ந்தவன் வேகமாய் இறங்கி
வாங்கி வந்தான் கைநிறைய பலூன்களுடன்
அழுத குழந்தையின் கைகளில் ஒன்றை திணித்து..
சிறு சிறு ஊதல்களில் பெரிதாகும் பலூனைப்போல்
சிறு சிறு ஊடல்களில் பெரிதாகும் பந்தம்
உணர்ந்தவனாய் விட்டுவந்த மனைவியையும்
குழந்தைகளையும் எண்ணி பேருந்து நிற்கும்முன்
இறங்கிகொண்டிருந்தது அவன்மனம்
அடுத்த நிறுத்தத்தில்....
(நேசமித்ரா, பா.ரா பிழையிருந்தால் மன்னியுங்கள்
உங்கள் நிழலாய் நானும் வரைந்து
வடித்து பார்க்கின்றேன் அவ்வளவே)
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..
லேபிள்கள்:
நகல்


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)