சனி, 26 பிப்ரவரி, 2011

அகயுகம்



அகம் தர மறுத்த 
ஞானம் எதுவுமில்லை,

யுகம் எங்கும்  பிறர் பொருள் 
தேடாதவரை.

உன்னில் மூழ்க 
கிடைக்கும் முத்து 
ஆழியிலும் கிடைத்திடாது..

அன்பை சொல்ல 
ஞானம் தேவை இல்லை ..

ஞானத்தின் அன்பில் 
அன்பை தவிர வேறெதுவுமில்லை.

இரு மெய் புணர் உலகில் 
பொய்யென யாரும் பிறப்பதில்லை.


தன்னை சுற்றும் 
உலகம் மாறவில்லை 


உன்னை சுற்றும் 
உலகில் உன்னில் 
சற்றும் உணராதிருந்தால்..
என்ன சுற்றி பயன் அதற்கு..


யுகத்தின் பொருள் அகம் 
அகத்தின் பொருள் யுகம் 


யுகத்தில் நீயென 
கிடைக்கப்பெறுவதை விட 
யுகமே நீயனே உணர்ந்திடு
அகமே.......



   




13 கருத்துகள்:

KANMANI சொன்னது…

அன்பை சொல்ல
ஞானம் தேவை இல்லை ..

ஞானத்தின் அன்பில்
அன்பை தவிர வேறெதுவுமில்லை.


யுகத்தில் நீயென
கிடைக்கப்பெறுவதை விட
யுகமே நீயனே உணர்ந்திடு
அகமே.......

EXCELLENT NANBA...
INTHA VARIGAL SUPERB...
YENNAI EERTHIDUM VARTHAIGAL...

Ashok D சொன்னது…

நல்லாயிருக்குங்க சங்கர் :)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்ல கவித்துவமான கவிதை..
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..

தொடர்ந்து வாருங்கள்.. வழி காட்டியதற்கு நன்றி ...

இன்றைய கவிதை சொன்னது…

யுகம் தான் அகம் , அகம் தான் யுகம் என அருமையாக சொல்லியிருக்கீங்க

அன்பை சொல்ல ஞானம் வேண்டாம் அதுவும் மிக அருமை

நன்றி

ஜேகே

சந்தான சங்கர் சொன்னது…

கண்மணி

தொடர்ந்த வருகைக்கும்
கவிதையின்பால் கொண்ட
ஈர்பிற்கும் மிக்க நன்றி.

அசோக்

வாழ்த்துக்கு நன்றி நண்பா,

கவிதை வீதி

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி சௌந்தர்.
தொடர்ந்து சந்திப்போம்..

இன்றைய கவிதை

மீண்டும் வருகை புரிந்து
வாழ்த்தியமைக்கு நன்றி
ஜேகே.

க.பாலாசி சொன்னது…

சங்கர்... நல்லாயிருக்குங்க.. ரசித்தேன்..

விஜய் சொன்னது…

புறமற்ற அகத்தின் யுகம் அருமை

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

ஹேமா சொன்னது…

யுகமும் அகமும் ஒன்றென்று சொல்லி ஒரு மெல்லிய மனமயக்கத்தையே கொண்டுவந்திருக்கிறீர்கள் சங்கர் !

Thenammai Lakshmanan சொன்னது…

உன்னை சுற்றும்
உலகில் உன்னில்
சற்றும் உணராதிருந்தால்..
என்ன சுற்றி பயன் அதற்கு..


/// மிக அருமையான வரிகள்..

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிமை அருமை... தொடர்ந்து வாங்க.. நாம் ஒருவருக்கோருவர் ஆதரவாக இருப்போம்..

ஆயிஷா சொன்னது…

அருமை.வாழ்த்துக்கள்.

வாணி நாதன். சொன்னது…

மிகவும் அருமை...

தோழி,
வாணி...

சந்தான சங்கர் சொன்னது…

பாலாசி

ரசனைக்கு நன்றிங்க
பாலாசி

விஜய்

அகம் ரசித்த நண்பனுக்கு
நன்றி

ஹேமா

வாங்க ஹேமா
உங்கள் வாழ்த்து என்றும் இனிது.

தேனம்மை

வாழ்த்துக்கு நன்றி தோழி..

கருண்

நிச்சயம் நண்பா
தொடர்ந்து சந்திப்போம்..

ஆயிஷா

தொடர் வருகைக்கு
மிக்க நன்றி தோழி..

வாணிநாதன்

என்றும் தொடரும்
தோழி வாணிக்கு நன்றிகள்
பல..