திங்கள், 23 மே, 2011

நீ ஒன்றே!



நினைவுகளை திருத்தி பார்க்கின்றேன்
அதன் நிழல்கள் மாறவில்லை,
உலகமே உயிர் பெற்றிருந்தாலும்
அகம் தேடும் உயிர் நீயல்லவா!

கேள்விகளுக்காகவே காத்திருக்கும் 
பதில்போல் உன் 
அய்யங்களுக்காகவே என் மெய் 
விழித்திருக்கின்றது.

அறிந்தவளின் அறியாமையில் 
அறிந்து கொள்ளும் அதிசயங்கள்  பல,

புரிந்தவளுக்கு புதிதாய் 
எத்தனை வருடங்கள் பிறந்தாலும்
உன் அன்பின் இளமை படிக்க 
வயதில்லையடி எனக்கு.. 

உலகம் ஒன்றல்ல..
உணர்வில் நீ ஒன்றே..







3 கருத்துகள்:

Ashok D சொன்னது…

ஆங் ரைட்டுங்க :))

kanmani சொன்னது…

நினைவுகளை திருத்தி பார்க்கின்றேன்
அதன் நிழல்கள் மாறவில்லை,
உலகமே உயிர் பெற்றிருந்தாலும்
அகம் தேடும் உயிர் நீயல்லவா!

உலகம் ஒன்றல்ல..
உணர்வில் நீ ஒன்றே..


nalla irukku sankar..
itha varigal excellent..
ungal thirumanathirkku yen nal vazhlthukkal...

ஹேமா சொன்னது…

மனங்கள் ஒன்றானால் உயிர் ஒன்றுதானே !