வெள்ளி, 27 மே, 2011

அன்பே...


இரவையும் பகலையும் நிரந்திரமாய் 
கிடைக்கப்பெற்ற உலகமிது,
பகலை இருட்டிப்பு செய்யவும் 
இருளை வெளிச்சமாக்கவும்  
துடிக்கும் மனித முயற்சிகள்..

மழலை என்பது அதிகாலை 
முதுமை என்பது அந்தி,
மிகிந்து குறையும் 
வளர்ந்து தேயும் உலக வாழ்வில் 
நிரந்திரம் எதுவுமில்லை.

அன்பையும் பசியையும் 
இழந்த மனிதன்தான் 
பண்பையும் பரிவையும் மீறுகின்றான்

சுயம் சுற்றும் உலகில் 
சுயம் பெற்றவன் மனிதனே!
மனிதனின் மகத்துவம் மறைக்கும் 
மனித கொள்கையில் பிறந்த கடவுள்.

கண்டு  கொள்ளமுடியாத அன்பில்   
காணாமல் கிடைத்ததாம் பக்தி.
கடவுள் என்பது சுய நம்பிக்கைக்கு 
வைக்கப்படும் ஓர் புள்ளியே!
கடந்தவன் தெய்வமாகிறான் 
கடக்காதவன் தெய்வம் படைக்கின்றான்,

அறிவு என்பது ,
முன்னால் படைக்கப்பெறுவதில்லை
உன்னால் கிடைக்கப் பெறுவதே!

அன்பு என்பது, 
படைத்து  பெறுவதல்ல 
கிடைத்து பெறுவதே!
கிடைக்காமல் பெற முயற்சிக்கும் 
எண்ணம் கடவுள்..
கிடைத்தும் கொடுக்க மறுக்கும் 
நிலை மனிதன்.

இருப்பதை கொடுக்க (அன்பு) மறுப்பதில்தான் 
இல்லாததில் நம்பிக்கை (கடவுள்) பிறக்கின்றது.

உலகம் ஒன்றுபட, 
அன்பை தேட முயலாதிர்கள், 
அன்பை கொடுக்க முயலுங்கள்.

அன்பிற் சிறந்த கடவுளுமில்லை 
உன்னில் பிறக்காத அன்புமில்லை..


7 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கவி மழையில் நனைந்தேன்..

விஜய் சொன்னது…

சுயம் அற்ற மனிதனை பார்க்க ஆசை

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

KANMANI சொன்னது…

மழலை என்பது அதிகாலை
முதுமை என்பது அந்தி,
மிகிந்து குறையும்
வளர்ந்து தேயும் உலக வாழ்வில்
நிரந்திரம் எதுவுமில்லை.


அன்பையும் பசியையும்
இழந்த மனிதன்தான்
பண்பையும் பரிவையும் மீறுகின்றான்

SUPERB SANKAR.. ABSOLUTELY CORRECT..
NIRANTHARAM ILLA ULAGIL YETHTHANAI PEARASAIGAL...
"ANBEA" KAVITHAIKKU ANBANA VAZHTHUKKAL...

இன்றைய கவிதை சொன்னது…

அன்பிற் சிறந்த கடவுளுமில்லை
உன்னில் பிறக்காத அன்புமில்லை..

அருமை சங்கர்

மிக உண்மை

நன்றி
ஜேகே

KANMANI சொன்னது…

NANBA...

UNGAL KAVITHAIGAL YEAN MOONDRAM PIRAIYIL VARAVILLAI...
VIRAIVIL VAARUNGAL NANBA ... KAVITHAIKALAI VARAINTHIDUNGAL...

Thenammai Lakshmanan சொன்னது…

கவிதை அருமை சந்தான சங்கர்.

thiyaa சொன்னது…

கவிதை அருமை