வெள்ளி, 20 நவம்பர், 2009

கண்ணாடி முன்



கண்ணாடி முன்
கவிதையாய்
நான்..
கவிதையின்
அர்த்தமாய்
என்றும் நீ..

இதயத்தில்
உன்னை
தேடினேன்...
என்னை
தொலைத்துவிட்டு..

பெரிதான 
அன்பின் முன் 
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான 
உயிரிலும் 
பெரிதாக 
கலந்தது 
உன் அன்பு..

நீயும்
நானும்
பற்றிக்கொள்ள
பற்றிக்கொண்டது
காதல்
நெருப்பு..

சனி, 14 நவம்பர், 2009

சிந்தனை துளிகள்



மௌனம் சம்மதத்திற்கு பொருந்தும்
சங்கடங்களுக்கு பொருந்தாது
சங்கடத்தின் மௌனம் உன்னை
சப்தமாக கொன்றுவிடும்.

தியாகத்தில் திரியாய்
தீபத்தின் ஒளியாய் நீ
பிரகாசித்தாலும் நம்பிக்கை எனும்
எண்ணை இல்லாவிடில் உன்னால்
நிரந்திரமாய் பிரகாசிக்க முடியாது.

ஒரு பொய்க்கு உண்மையான
காரணம் இருக்கும்,
ஒரு உண்மைக்கு பொய்யான 
காரணம் இருக்கமுடியாது.

காலம் கடந்த ஞானம் 
முற்றுபெறுவதில்லை 
காலங்களை கடந்த ஞானம் 
விட்டுப்பிரிவதில்லை.

உலகை வெளிச்சமாக்கிய சூரியனால் 
உன்னை வெளிச்சமாக்க முடியாது 
உன்னில் நீ பிரகாசித்துவிட்டால் 
உன்னாலும் இவ்வுலகை 
பிரகாசிக்க வைக்க முடியும்.

அன்பை எடுப்பவன் ஆயுதத்தைவிட 
கூர்மையானவன்,
ஆயுதத்தை எடுப்பவன் அன்பினால் 
கூர்மையாக்கப்படாதவன். 

செவ்வாய், 10 நவம்பர், 2009

தொடர்பதிவு

அன்பு நண்பர் விஜய்க்காக....




1.A- Available/single - single but not reachable
                                      searching for a kind...

2.B- Best Friend - நிறைய நண்பர்கள் பட்டியலிட்டு
                               பார்க்கவேண்டுமா?

3 C - Cake or pie - இரண்டுமில்லை


4 D - Drink of choice - காபி (bru


5 E - Essential items you use everyday - My bike Suzuki Access125


6 F - Favorite Colour - ரோஸ்


7 G - Gummy bears or worms - இரண்டும் இல்லை


8 H - Hometown - கரூர்


9 I - Indulgence - வலைத்தளம்


10 J - January or February - போகி,


11 K - Kids and their names - இன்னும் மணமாகவில்லை


12 L - Life is incomplete without - ரசனை


13 M - Marriage date - சொல்லப்படாத கவிதை


14 N - Number of siblings - 1 அக்கா உஷா


15 O - Oranges / Apples - ஆப்பிள்


16 P - Phobias / Fears - இயற்கை அழிவுகள்


17 Q - Quotes for today - silence is the sound of soul
                                           violence is the mute of soul

18 R - Reason to smile - மழலைகள்


19 S - Season - குளிர்காலம்


20 T - Tag 4 people - எல்லோரும் ஒரு ரவுண்டு வந்துட்டாங்க.


21 U - Unknown fact about me - மூன்று வருடங்களுக்கு முன் மூன்றாம்பிறை கவிதை தொகுப்பு வெளியிட்டது. 


22 V - Vegitable you dont like - அப்படி எதுவும் இல்லை.

23 W - Worst habbit - வெளுத்ததெல்லாம் பால்


24 X - Xrays you had - வலது கையில்


25 Y - Your favorite food - இட்லி பூண்டு சட்னி (காரமா)


26 Z - Zodiac sign - மீனம்




அன்பிற்குரியவர்கள் - அனைத்து நட்பும்


ஆசைக்குரியவர்கள் - எதிர்பார்ப்பின் விளிம்பில்


இலவசமாய் கிடைப்பது - மழை, மழலை மொழிகள்.


ஈதலில் சிறந்தது - அன்பான பசியாற்றல்


உலகத்தில் பயப்படுவது - உலக வெப்பமடைதல்


ஊமை கண்ட கனவு - சொல்ல தெரியவில்லை.


எப்போதும் உடன் இருப்பது - Nokia 6021


ஏன் இந்த பதிவு - நட்புக்காக


ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - தக்க சமயத்தில் உதவுவது


ஒரு ரகசியம் - அன்பைவிட கூர்மையான ஆயுதம் இல்லை


ஓசையில் பிடித்தது - புல்லாங்குழல்


ஔவை மொழி ஒன்று - ஆறுவது சினம்







நன்றிகள் பல என் வலை நண்பர்களுக்கு...

வியாழன், 29 அக்டோபர், 2009

ஆனந்த நேசம்


இளையராஜாவின்
இசையில் சங்கீதமேகம் தேன் சிந்தும் நேரம்...
பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.
அதில் சில வரிகள் மாற்றி ஓர் பாடல்.

ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்
பொன்மாலை தீபம் சூடும் நேரம்..
ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!
வீசும் ஒளி யாவும் என் பாசமே!

ஆனந்த நேசம்.....

காணும் கனவுகள் கண்ணிலே
காலம் வரைந்திடும் உன்னிலே
வீணை மொழிதனில் வானை அழைத்திட
நீ...ஓடி வா...
எந்தன் ஏட்டில் வந்த பாட்டில்
இசையாய் ஒலித்தேன்,
எந்தன் ஏட்டில் வந்த பாட்டில்
இசையாய் ஒலித்தேன்
பாடல் ஓர் தேடலே...

ஆனந்த நேசம்...

அன்பு என்னும் கீதமே!
ஆள பிறந்திடும் நாதமே!
உள்ள விழிகளில்
வெள்ளம் பெருகிடும் ஓர் ஜீவனே!
உன்னை தீட்டும் எந்த பாட்டும்
உறங்கா உறவே!
உன்னை தீட்டும் எந்த பாட்டும்
உறங்கா உறவே!
பாடல் ஓர் தேடலே....

ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்,
பொன்மாலை தீபம் சூடும் நேரம்..
ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!
வீசும் ஒளி யாவும் என் பாசமே!



(குறை இருந்தால் மன்னிக்கவும்)
நன்றி.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மருந்து


தாழப்பறந்த
பருந்தினை
சினந்து
விரட்டியது
சேவல்
பெட்டைகுஞ்சுகளுடன்..

தவழக்கிடந்த
குழந்தையின் முன்
மருந்து
வேண்டி
கர்பிணியை
உதைத்த
கணவன்..

மருந்தின் முன்
பருந்தாகிபோனவனாய்..

சனி, 24 அக்டோபர், 2009

சில சிந்தனைகள்


எல்லோரும் உன்னைப்போல்
இருக்கவேண்டும் என நீ நினைத்தால்
உன் அறிவுதான் இந்த
உலகத்தின் அறிவாக இருக்கும்..

உன்னை கடந்துவிட்ட துன்பங்களுக்கும்
உன்னால் நடந்துவிட்ட துன்பங்களுக்கும்
இடையே உள்ள வேறுபாட்டில்தான்
உன் வாழ்வின் இன்பக் கணக்கு எழுதப்படுகிறது..

சப்தங்களை நிறுத்தாதவரை
உன்னால் அமைதியை உணரமுடியாது,
எண்ணங்களை நிறுத்தாதவரை
உன்னால் தெளிவாக சிந்திக்கமுடியாது..

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல்
இருக்கும்போது நீ மனசு சொல்வதை
மட்டும் கேள்! அறிவை கேட்காதே!
அறிவுக்கு அனைத்தையும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.

நீ புரிந்துகொண்ட விசயங்களை
தெரிந்து கொள்ள நினைக்காதே!
நீ தெரிந்து கொண்ட விசயங்களை
புரிந்து கொள்ளாமல் இருக்காதே!

நல்லதை அறிந்துகொள்!
தீயதை தெரிந்துகொள்!

செவ்வாய், 20 அக்டோபர், 2009

மனமே


மனமே!
எப்படி இருக்கின்றாய் நீ?
பேதையின் கூட்டிலும் இருக்கின்றாய்,
பேரறிவாளன் கூட்டிலும் இருக்கின்றாய்.

பறிக்கவும் கொடுக்கவும்
இரு கைகள் போதவில்லை என
ஆயிரம் கரங்கள் கேட்கிறாய்!
அழகினை ஆராதிக்க
இரு விழிகள் போதவில்லை என
ஆயிரம் விழிகள் கேட்கிறாய்!

நிறைகின்றாய் குறைகின்றாய்
நிலவைப்போல் நியதியில்லாமல்..
நினைகின்றாய் நனைகின்றாய்
நித்தமோர் நிமித்தமாய்..

உடற்சிறைபட்ட மனமே!
உணர்ச்சி பெருக்கால்
உள்ளச்சிறையும் படுகிறாய்.

அவய துடிப்புகள் எல்லாம்
சமய துடிப்புகள்வரைதான்,
வார்த்தை ரணங்கள்
கணங்கள் கடந்தாலும்
மனங்கள் கடப்பதில்லை..

இறந்து இறந்து
பிறந்து வாழ்கிறாய்
மறந்துவிட மனமில்லாத மனமே!

புத்தி உறங்கி விழிக்கிறது
மனம் உறக்கத்திலும் விழிக்கிறது
கனவு விழி திறந்து..

சிதைக்குள்
சிறைப்பட்டு சிறைபட்டே
வதைபட்டு கொண்டிருக்கின்றாய்
உணர்வுகளின் பிடியில்
நிராயுதபாணியாய்...

மனமுவந்து பார்த்தால்
மனம் ஓர் குழந்தையே..