சனி, 8 ஆகஸ்ட், 2009

பிரிந்து

கடலை பிரிந்த அலைகள்,
மடலை பிரிந்த வரிகள்,
உடலை பிரிந்த உயிர்,
நிழலை பிரிந்த நிஜம்,
இருக்குமேயானால்!!
நானும் இருப்பேன்!
உன் நட்பை பிரிந்து..

விழித்திருக்கும்

புத்தி உறங்கி விழிக்கும்
மனம் உறக்கத்திலும்
விழித்திருக்கும்...

உறவாடும்

சோகமும் சுகமும் உன்னை
ஒட்டி உறவாடும்
கோபமும் தாபமும் உன்னை
வெட்டி உறவாடும்.

நிரந்திரம்

எதுவும் நிரந்திரமில்லாமல்
போவது ஓர்
நிரந்திரமே!

நட்பு

நட்பு என்பது
நம் வாழ்க்கை புத்தகத்தில்
இடையில் வந்த முதல் அத்தியாயம்
நம் வாழ்வின் அத்தியாயங்கள்
முடிந்தாலும்,
நட்பின் அத்தியாயங்கள்
என்றும் முடிவதில்லை.

தொழிலாளி

ஒரு தொழிலாளியின் வியர்வை
முதலாளியின் முதலீடுக்கு சமம்
தொழிலாளியின் கண்ணீர்
முதலாளியின் ரத்தத்திற்கு சமம்.

என்னுள்

என்னுள்...
அன்பை தேடினால்
அன்பு மிஞ்சும்,
குற்றம் தேடினால்
குற்றம் மிஞ்சும்.
அன்பு என் ஆழ்மனது
குற்றம் என் நொடிபொழுது.