வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

விழிகளை பார்த்து


விழிகளை பார்த்து
இமைகள் சொன்னது....

"நான் என்றும் உன்னை அரவணைகின்றேன்
உன் பார்வை மட்டும் எங்கேயோ!"

விழிகள் சொன்னது...

என்னை பார்க்க செய்பவனும் நீதான்,
உறங்க செய்பவனும் நீதான்,
என் மீது தூசு படாமல் காப்பவனும் நீதான்,

உன் அன்பை எண்ணி
உனக்குள் உருளுவதும் உருகுவதும்
இந்த விழிகள் மட்டுமே.....

இமைகள் இமைக்க மறுத்தன....

கருத்துகள் இல்லை: