
கைவண்டி இழுப்பவனின்
ஏழ்மையை சொல்லிடும்
எலும்பு வரிகள்..
ஆற்றங்கரையில் சாயம்
வெளுக்கின்றான்
சாதிகள் எனும் சாயத்தை
வெளுக்கமுடியாமல்..
பருந்தின் பார்வைக்கு
தவறிய குஞ்சுகள்
எலும்பு குவியலாய்
குப்பை மேட்டில்...
விடுதலை கிடைத்தவுடன்
தற்கொலையா!!
முறைத்துக்கொண்டும்
நுரைத்துக்கொண்டும் பொங்கிய
மதுபானம் விழப்போவது கழிவறைக்குள்
என்பதால்!!!
மறைந்துவிட்ட ஒளியினை
அழுதுகொண்டே தேடிய
மெழுகுவர்த்தி..
பேதையாய்
பிறந்ததால் என்னவோ!
மடந்தையாகியும்
மணமாகாத முதிர்கன்னி..
மழை பொழிகிறது
மாசுகளின் சாயம் துடைத்திட,
மதம் பொழிகிறது
மனிதர்களுக்கு சாயம் பூசிட...