விழிகளை பார்த்து இமைகள் சொன்னது.... "நான் என்றும் உன்னை அரவணைகின்றேன் உன் பார்வை மட்டும் எங்கேயோ!" விழிகள் சொன்னது... என்னை பார்க்க செய்பவனும் நீதான், உறங்க செய்பவனும் நீதான், என் மீது தூசு படாமல் காப்பவனும் நீதான், உன் அன்பை எண்ணி உனக்குள் உருளுவதும் உருகுவதும் இந்த விழிகள் மட்டுமே..... இமைகள் இமைக்க மறுத்தன....
உன் கண்களை மூடி பார் அதில் கனவுகளாய் நானிருப்பேன் உன் சிந்தனைகளை தேடி பார் அதில் நினைவுகளாய் நானிருப்பேன் உன் இதயத்தை திறந்து பார் அதில் உயிராய் நானிருப்பேன் இதில் நீ என்பது எதுவுமில்லை உன்னுள் முழுமையாய் நானிருக்கின்றேன் உன்னுள் இருக்கும் என்னை சந்தோசமாய் வைத்திரு என்றும்...
வானம் மட்டும் பொழியவில்லை உன் விழிகளும்தான் சிறிய ஊடல்கள் எல்லாம் பெரிய இடைவெளியில் பரந்திட்டாலும் இனி அந்த சண்டைகளையும் உன் கோபங்களையும் நினைவுகளாக்கி பயணிக்கின்றேன்....
தமிழ் தேரின் சாரதி, விடுதலை காண்டீபத்தின் தமிழ் பிரம்மாஸ்திரம். தான் வளர்த்த மீசையினை தமிழுக்கும் வளர்த்தவன். தலைப்பாகை கட்டி தமிழ் பாவிற்கும், பாவைக்கும் வீரம் வளர்த்த புரட்சி கவி....