நகர்ந்துகொண்டிருந்த பின்னிரவு,
அழுதுகொண்டே தீர்ந்துகொண்டிருந்த
மெழுகுவர்த்தியாய் அவள்..
மது நீர்த்து மாது தீர்த்திட
கூலி கொடுக்கிறது மாமிச பட்சி,
பட்சியாய் நுழைந்ததெல்லாம்
பச்சையாய்.....!
வீணையவள் மீட்டப்படுகிறாள்
ஈன ஸ்வரங்களாய்..
மீட்கப்பட முடியாமல்...
தந்தியறுத்து தந்தியறுத்து
பிணைக்கப்படுகிறாள் மீண்டும்
பந்தி படைக்க..
என்றோ பூக்களைகூட பாரமென
வீசியவள் தலைக்கனம்
சகவாச சேற்றினில் விழுந்து
புரளமுடியாமல் புலம்புகிறது..
நாதியறுத்து வந்தவளின்
நாடியறுக்கும் உலகினில்..