பெண்மையே!
உன்னை புரிந்து புரிந்து
பிரிகிறேன் பிரியமுடியாமல்,
உயிர் கொடுத்து உயிர் எடுக்கும்
உன் பிரம்மம் ஓர் சூத்திரமே..
அணையக் கிடைத்ததில் எல்லாம்
அடை காக்கவில்லை,
இணையக் கிடைத்ததில் விடை தராமல்
விடை பெரும் அம்புகளாய் எத்தனை கோடி..
உடலும் கடலென மூழ்கிய முத்துக்களில்
என்னை மட்டும் தத்தெடுக்கும் அன்னை சிற்பியே!
தன்னை அறியா தளிரும் உன்னை அறியும்..
என்னை அறிந்து புரியக் கிடைத்த பிரியம்
உலகில் நீயல்லவா பெண்மையே!..