நேற்றைய அனுபவம்,
இன்றைய சிந்தனை!
இன்றைய சிந்தனை,
நாளைய வழிகாட்டி!
நாளைய வழிகாட்டி,
இன்றைய தத்துவம்..
தெய்வ நம்பிக்கை என்பது
உன் உடலில் இருக்கும்
குருதி போன்றது,
ஒவ்வொரு துளி சிந்தும்பொழுதும்
உன் இறை நம்பிக்கையை
நினைவுபடுத்திக் கொள்கிறாய்.
நீ கடந்து சென்ற பாதையில்தான்
நீ மறந்து சென்ற வழிகள் இருக்கும்
நீ மறந்து சென்ற வழிகளில்தான்
நீ கடந்துவிட்ட வாழ்வு இருக்கும்..
மண்ணில் இருக்கும்
இரும்பு துகள்களுக்குகூட ஒரு
காந்தபுலன் கிடைத்துவிட்டால்
எழுந்துவிடுகிறது,
நீயும் உன் திறமைகளுக்கான
புலனில் எழாவிட்டால்...
உன் திறமைகளும் மண்ணில்
மறைந்த துகள்களே..!