வியாழன், 29 அக்டோபர், 2009
ஆனந்த நேசம்
இளையராஜாவின்
இசையில் சங்கீதமேகம் தேன் சிந்தும் நேரம்...
பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.
அதில் சில வரிகள் மாற்றி ஓர் பாடல்.
ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்
பொன்மாலை தீபம் சூடும் நேரம்..
ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!
வீசும் ஒளி யாவும் என் பாசமே!
ஆனந்த நேசம்.....
காணும் கனவுகள் கண்ணிலே
காலம் வரைந்திடும் உன்னிலே
வீணை மொழிதனில் வானை அழைத்திட
நீ...ஓடி வா...
எந்தன் ஏட்டில் வந்த பாட்டில்
இசையாய் ஒலித்தேன்,
எந்தன் ஏட்டில் வந்த பாட்டில்
இசையாய் ஒலித்தேன்
பாடல் ஓர் தேடலே...
ஆனந்த நேசம்...
அன்பு என்னும் கீதமே!
ஆள பிறந்திடும் நாதமே!
உள்ள விழிகளில்
வெள்ளம் பெருகிடும் ஓர் ஜீவனே!
உன்னை தீட்டும் எந்த பாட்டும்
உறங்கா உறவே!
உன்னை தீட்டும் எந்த பாட்டும்
உறங்கா உறவே!
பாடல் ஓர் தேடலே....
ஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்,
பொன்மாலை தீபம் சூடும் நேரம்..
ராகம் ஒரு தீபமே! என்னில் ஒளி வீசுமே!
வீசும் ஒளி யாவும் என் பாசமே!
(குறை இருந்தால் மன்னிக்கவும்)
நன்றி.
லேபிள்கள்:
பாடல்
செவ்வாய், 27 அக்டோபர், 2009
மருந்து
தாழப்பறந்த
பருந்தினை
சினந்து
விரட்டியது
சேவல்
பெட்டைகுஞ்சுகளுடன்..
தவழக்கிடந்த
குழந்தையின் முன்
மருந்து
வேண்டி
கர்பிணியை
உதைத்த
கணவன்..
மருந்தின் முன்
பருந்தாகிபோனவனாய்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)