வெள்ளி, 27 மே, 2011

அன்பே...


இரவையும் பகலையும் நிரந்திரமாய் 
கிடைக்கப்பெற்ற உலகமிது,
பகலை இருட்டிப்பு செய்யவும் 
இருளை வெளிச்சமாக்கவும்  
துடிக்கும் மனித முயற்சிகள்..

மழலை என்பது அதிகாலை 
முதுமை என்பது அந்தி,
மிகிந்து குறையும் 
வளர்ந்து தேயும் உலக வாழ்வில் 
நிரந்திரம் எதுவுமில்லை.

அன்பையும் பசியையும் 
இழந்த மனிதன்தான் 
பண்பையும் பரிவையும் மீறுகின்றான்

சுயம் சுற்றும் உலகில் 
சுயம் பெற்றவன் மனிதனே!
மனிதனின் மகத்துவம் மறைக்கும் 
மனித கொள்கையில் பிறந்த கடவுள்.

கண்டு  கொள்ளமுடியாத அன்பில்   
காணாமல் கிடைத்ததாம் பக்தி.
கடவுள் என்பது சுய நம்பிக்கைக்கு 
வைக்கப்படும் ஓர் புள்ளியே!
கடந்தவன் தெய்வமாகிறான் 
கடக்காதவன் தெய்வம் படைக்கின்றான்,

அறிவு என்பது ,
முன்னால் படைக்கப்பெறுவதில்லை
உன்னால் கிடைக்கப் பெறுவதே!

அன்பு என்பது, 
படைத்து  பெறுவதல்ல 
கிடைத்து பெறுவதே!
கிடைக்காமல் பெற முயற்சிக்கும் 
எண்ணம் கடவுள்..
கிடைத்தும் கொடுக்க மறுக்கும் 
நிலை மனிதன்.

இருப்பதை கொடுக்க (அன்பு) மறுப்பதில்தான் 
இல்லாததில் நம்பிக்கை (கடவுள்) பிறக்கின்றது.

உலகம் ஒன்றுபட, 
அன்பை தேட முயலாதிர்கள், 
அன்பை கொடுக்க முயலுங்கள்.

அன்பிற் சிறந்த கடவுளுமில்லை 
உன்னில் பிறக்காத அன்புமில்லை..


திங்கள், 23 மே, 2011

நீ ஒன்றே!



நினைவுகளை திருத்தி பார்க்கின்றேன்
அதன் நிழல்கள் மாறவில்லை,
உலகமே உயிர் பெற்றிருந்தாலும்
அகம் தேடும் உயிர் நீயல்லவா!

கேள்விகளுக்காகவே காத்திருக்கும் 
பதில்போல் உன் 
அய்யங்களுக்காகவே என் மெய் 
விழித்திருக்கின்றது.

அறிந்தவளின் அறியாமையில் 
அறிந்து கொள்ளும் அதிசயங்கள்  பல,

புரிந்தவளுக்கு புதிதாய் 
எத்தனை வருடங்கள் பிறந்தாலும்
உன் அன்பின் இளமை படிக்க 
வயதில்லையடி எனக்கு.. 

உலகம் ஒன்றல்ல..
உணர்வில் நீ ஒன்றே..