ஞானம் எதுவுமில்லை,
யுகம் எங்கும் பிறர் பொருள்
தேடாதவரை.
உன்னில் மூழ்க
கிடைக்கும் முத்து
ஆழியிலும் கிடைத்திடாது..
அன்பை சொல்ல
ஞானம் தேவை இல்லை ..
ஞானத்தின் அன்பில்
அன்பை தவிர வேறெதுவுமில்லை.
இரு மெய் புணர் உலகில்
பொய்யென யாரும் பிறப்பதில்லை.
தன்னை சுற்றும்
உலகம் மாறவில்லை
உன்னை சுற்றும்
உலகில் உன்னில்
சற்றும் உணராதிருந்தால்..
என்ன சுற்றி பயன் அதற்கு..
யுகத்தின் பொருள் அகம்
அகத்தின் பொருள் யுகம்
யுகத்தில் நீயென
கிடைக்கப்பெறுவதை விட
யுகமே நீயனே உணர்ந்திடு
அகமே.......