செவ்வாய், 27 அக்டோபர், 2009

மருந்து


தாழப்பறந்த
பருந்தினை
சினந்து
விரட்டியது
சேவல்
பெட்டைகுஞ்சுகளுடன்..

தவழக்கிடந்த
குழந்தையின் முன்
மருந்து
வேண்டி
கர்பிணியை
உதைத்த
கணவன்..

மருந்தின் முன்
பருந்தாகிபோனவனாய்..

11 கருத்துகள்:

விஜய் சொன்னது…

சிந்தனைகள் வலியுடன் இருக்கிறது.

வாழ்த்துக்கள் சங்கர்

விஜய்

விஜய் சொன்னது…

டைரி படிக்க வாங்க சங்கர்

சந்தான சங்கர் சொன்னது…

நன்றி விஜய்..

புலவன் புலிகேசி சொன்னது…

வலி நிறைந்த கவிதை...

சத்ரியன் சொன்னது…

//மருந்தின் முன்
பருந்தாகிபோனவனாய்.. //

சங்கர்,

குடிக்கார கணவனைக் குறிப்பிடுவது புரிகிறது.

பருந்தின் செயலும், அவனின் செயலும் வெவ்வேறு நோக்கங்கொண்டவையல்லவா.?

"பருந்து" கோழிக்குஞ்சினை இரையாக்கிக் கொள்ள வருகிறது.
"குடிக்காரன்" உயிரை அழிக்கவா அந்தச் செயலை செய்கிறான்.?

ம்ம்ம்ம்ம்...ஒப்பீடு எங்கயோ எனக்கு உதைக்குது.

க.பாலாசி சொன்னது…

//மருந்தின் முன்
பருந்தாகிபோனவனாய்.. //

பெண்ணவள் சேவலாக சீறியிருக்கலாம்.

எந்த மருந்தை சொன்னீர்கள். சாராயத்தைதானே.

சிந்தனை கவிதை நன்று...

இன்றைய கவிதை சொன்னது…

கவிதை

'கைபிடித்தவன்
கைவிடுதலை'
சொல்வதாய்த்தான் எனக்குப் படுகிறது!

'கர்ப்பிணி' என்பதே சரி ஐயா!

சந்தான சங்கர் சொன்னது…

@புலவன் புலிகேசி
வாங்க புலிகேசி
வருகைக்கு மிக்க நன்றி..

@சத்ரியன்
ஒரு ஐந்தறிவு படைத்த
விலங்குக்கு கூட தன் குஞ்சுகளின் மேல்
உள்ள அக்கறை மனிதனுக்கு இல்லை
என்பதைத்தான் கூறியுள்ளேன்.
இன்றைய கவிதை சொன்னதுபோல் கைவிடுதலே..
நன்றி சத்ரியன்..

@பாலாசி
ஆம் சரக்கைதான் சொன்னேன்
நன்றி பாலாசி..

@இன்றைய கவிதை
அது கர்ப்பிணிதான்
நன்றி நண்பரே..

ஹேமா சொன்னது…

சங்கர் கவிதையின் விளக்கத்தின் பின் கூடுதலாச் சிந்திக்க வைக்கிறது.

இரசிகை சொன்னது…

vali.........

அன்புடன் நான் சொன்னது…

நச்!