வியாழன், 6 ஆகஸ்ட், 2009

உன்

கைகளுக்கு எட்டாத விசயங்களை
புத்தியால்தான்பெற முடியும்.
புத்திக்கு எட்டாத விசயங்களை
மனதால் மட்டுமே உணரமுடியும்.

விடியல்

மாற்றம் மிகுந்த உலகில்
ஏமாற்றம் இல்லாத விடியல்...

வெற்றியை

வெற்றியை விரல் நுனியில்
தாங்குபவனைவிட,
தோல்வியை இதயத்தில்
தாங்குபவனே மேலானவன்.

அந்தியே!

நிழலை நீளமாக்கி
நினைவுகளை ஆழமாக்கி
ஒளிதனில் ஓவியம் படைத்துவிட்டு
உறங்க செல்லும் அந்தியே!
உன் மனதின் வெளிச்சத்தை மட்டும்
உறங்க செய்துவிடாதே!

புதன், 5 ஆகஸ்ட், 2009

உன்னை

உன்னை விதித்தவனிடம் பக்தி கொள்,
உன்னை விதைத்தவனிடம் பாசம் கொள்,
உன்னை பறித்தவனிடம் நேசம் கொள்,
உன்னை புரிந்தவனிடம் நட்பு கொள்.

காதலும் நட்பும்

காதலும் நட்பும்
அன்பு எனும் அச்சில் செயல்படும்
கத்தரிகோல் போன்று
இருக்க வேண்டும். அவை
ஒன்றை ஒன்று வெட்டி கொள்ளாமல்
அதை கொச்சை படுத்துபவர்களை
வெட்டும்படி இருக்கவேண்டும்.

நட்பு

விரல்கள் சந்தித்தபோது
இதயம் நெருங்கவில்லை,
விடைகள் பெறும்போது
விரல்கள் விலகினாலும்
இதயம் விலகவில்லை...