
முகிலின் மரணம்
மழையின் ஜனனம்,
மழையின் ஜனனம்,
விதையின் மரணம்
துளிரின் ஜனனம்,
வாசனையின் ஜனனம்,
ஞாயிறின் மரணம்
திங்களின் ஜனனம்.
இயற்கையின் எல்லா மரணங்களும் ஓர்
புனித ஜனனத்தை படைத்துவிட்டுதான் செல்கிறது.
ஓர் இறுதியாக மட்டுமே கணிக்கப்படுகிறது?
மானிட பிறவியிலும் மரணத்தில் ஓர்
ஜனனம் இருக்கின்றது,
அதுதான்...
பெண்மையின் மரணம்
தாய்மையின் ஜனனம்...




