வானில் மின்னிய நட்சத்திரங்களை
எண்ணி களைத்தேன்,
நட்சத்திரங்கள் கூறியது,
மின்னியதெல்லாம் எண்ணிவிட முடியாது
உன் வாழ்வில் நீ எண்ணியதெல்லாம்
மின்னிவிட முயற்சி செய் என்று...
புதன், 5 ஆகஸ்ட், 2009
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
நிழல்
நிழலுக்கு உண்மை நிஜம்
நிஜத்திற்கு பொய் நிழல்.
நிழல் நிஜமாகும்போது
பொய் மறைகின்றது.
நிஜம் நிழலாகும்போது
உண்மை மறைகின்றது.
நிஜத்திற்கு பொய் நிழல்.
நிழல் நிஜமாகும்போது
பொய் மறைகின்றது.
நிஜம் நிழலாகும்போது
உண்மை மறைகின்றது.
உளிகள்
உளிகளை தாங்கிய
சிலைகள்தான் வடிவம் பெரும்,
அலைகளை தாங்கிய
கரைகள்தான் அழகு பெரும்,
வலிகளை தாங்கிய
உள்ளம்தான் வாழ்வு பெரும்.
சிலைகள்தான் வடிவம் பெரும்,
அலைகளை தாங்கிய
கரைகள்தான் அழகு பெரும்,
வலிகளை தாங்கிய
உள்ளம்தான் வாழ்வு பெரும்.
மனிதன்
மனிதன் உறங்கும்போது
கனவுகளில் விழிதிருக்கின்றான்,
விழித்திருக்கும்போது
நினைவுகளில் உறங்குகின்றான்.
நேற்றைய சோகங்களில்
இன்றைய நிமிடங்களை கரைப்பது
நாளைய வாழ்வை தொலைப்பதாகும்.
கனவுகளில் விழிதிருக்கின்றான்,
விழித்திருக்கும்போது
நினைவுகளில் உறங்குகின்றான்.
நேற்றைய சோகங்களில்
இன்றைய நிமிடங்களை கரைப்பது
நாளைய வாழ்வை தொலைப்பதாகும்.
பிரிவதில்லை
அன்பு நெஞ்சங்கள்
அருகில் இருந்தால் என்ன?
தொலைவில் இருந்தால் என்ன?
உண்மையான அன்பும் நட்பும்,
என்றும் பிரிவதில்லை...
அருகில் இருந்தால் என்ன?
தொலைவில் இருந்தால் என்ன?
உண்மையான அன்பும் நட்பும்,
என்றும் பிரிவதில்லை...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)